விமான பயணிகளுக்கு கட்டண அதிர்ச்சி ஏர் இந்தியா அதிரடி விலையேற்றம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஏர் இந்தியா நிறுவனம் இன்று மார்ச் 12 முதல் மூன்று கட்டங்களாக விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. உள்நாட்டுப் பயணங்களுக்கு 399 ரூபாயும், வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்ல அதிகபட்சமாக 16,800 ரூபாய் வரையிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விமான எரிபொருள் மீதான வரியைத் தற்காலிகமாகக் குறைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதால், விரைவில் இந்த கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. சர்வதேசச் சூழல் சீரானதும் டிக்கெட் விலைகள் பழைய நிலைக்குத் திரும்பும் என்பதால், பயணிகள் அரசின் அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.