வங்கதேசத்தில் இந்து தலைவர் மரணம் பாகிஸ்தான் சதியின் பிடியில் அரசு என விஎச்பி குற்றச்சாட்டு

வங்கதேச முன்னாள் அமைச்சர் ரமேஷ் சந்திர சென் சிறைக்காவலில் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வினோத் பன்சால், வங்கதேசம் தற்போது ஐஎஸ்ஐ அமைப்பின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அங்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாதாரண இந்துக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளதாகவும், தேர்தலை முன்னிட்டு ஜிகாதி குழுக்களை திருப்திப்படுத்தவே இத்தகைய கொலைகள் நடப்பதாகவும் பன்சல் விமர்சித்துள்ளார். சென் அவர்களின் மரணம் இயற்கையானது அல்ல என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.