மத்திய பட்ஜெட் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் அரசு விருந்தினர்களுக்காக 1102 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் அரசு விருந்தினர்களுக்காக 1102 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் அமைச்சர்களின் சம்பளம், பிரதமர் அலுவலகம் (PMO) மற்றும் அரசு விருந்தினர்களுக்கான உபசரிப்பு செலவுகளுக்கான நிதி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இதற்காக மொத்தம் 1102 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 978.20 கோடி ரூபாயாக இருந்த இந்த ஒதுக்கீடு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் பயணச் செலவுகளுக்காக மட்டும் 620 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு 256.19 கோடி ரூபாயும், அமைச்சரவை செயலகத்திற்கு 80 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகச் செலவுகளுக்காக 73.52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு விருந்தினர்களின் உபசரிப்பு மற்றும் பொழுதுபோக்கு செலவுகளுக்காக 5.76 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மத்திய அரசின் உயர்மட்ட நிர்வாகம் மற்றும் சர்வதேச உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *