மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது
March 12, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு இந்தியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. கத்தார் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டதால் போக்குவரத்து மற்றும் தொழில்துறை முடங்கியுள்ளது. இதன் விளைவாக சிறு குறு தொழில்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. உற்பத்தித் திறன் குறைந்து வருவதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த பொருளாதார மந்தநிலை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.