ஜம்மு திருமண விழாவில் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு
March 12, 2026

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது திருமண விழாவொன்றில் நடத்தப்பட்ட கொலை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு பலத்த பாதுகாப்பையும் மீறி கமல் சிங் என்பவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அவர் உயிர் தப்பினார். இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 63 வயது தொழிலதிபர் கமல் சிங், கடந்த 20 ஆண்டுகளாக ஃபரூக் அப்துல்லாவை கொல்வதே தனது நோக்கம் என வாக்குமூலம் அளித்துள்ளார். மிக அருகிலிருந்து சுடப்பட்ட தோட்டா அதிர்ஷ்டவசமாக அவர் தலைக்கு மேல் சென்றது. அவரிடமிருந்த பிஸ்டலை பறிமுதல் செய்துள்ள போலீசார், இந்த அதிர்ச்சிகரமான தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.