புத்தாண்டு பரிசாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை வெளியிட்டது மத்திய அரசு

புத்தாண்டு பரிசாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை வெளியிட்டது மத்திய அரசு

புத்தாண்டை முன்னிட்டு நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தியை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான (ஜனவரி-மார்ச் 2026) பிபிஎஃப் மற்றும் என்எஸ்சி போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 31 அன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பழைய வட்டி விகிதங்களே தொடர்ந்து அமலில் இருக்கும்.

பணவீக்கம் காரணமாக வட்டி விகிதங்கள் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய முடிவால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன்படி சுகன்யா சம்ரித்தி மற்றும் மூத்த குடிமக்கள் திட்டங்களுக்கு அதிகபட்சமாக 8.2 சதவீத வட்டி தொடர்ந்து கிடைக்கும். மேலும் பிபிஎஃப் திட்டத்திற்கு 7.1 சதவீதமும், என்எஸ்சி திட்டத்திற்கு 7.7 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டாக வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *