கிண்டி மேம்பாலத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் போல் நடித்து தங்கம் பறிமுதல் செய்த ஊழியரின் பகீர் திட்டம்
March 10, 2026

சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் எனக்கூறி 1.5 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஜிஎஸ்டி அலுவலகம் சென்று விசாரித்தபோது, அப்படி எந்த சோதனையும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கூரியர் நிறுவன ஊழியர் ஜித்தேந்தர் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த துரோக திட்டத்தை தீட்டியது அம்பலமானது. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஜித்தேந்தரின் நண்பர்கள் தன்ராஜ் சர்மா மற்றும் ராம் ரகுநாத் சிங் ஆகியோரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.