சிலிண்டர் விலை உயர்வால் கலக்கத்தில் பொதுமக்கள் மற்றும் எலக்ட்ரிக் அடுப்புகளுக்கு மாறுகிறதா இல்லத்தரசிகள் கூட்டம்
March 10, 2026

மத்திய கிழக்கு போர் சூழலால் எரிவாயு விலை உயர்ந்து வரும் நிலையில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதன் விளைவாக கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இண்டக்ஷன் அடுப்புகளின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க பொதுமக்கள் மின்சார சமையல் முறைக்கு வேகமாக மாறி வருகின்றனர்.
சந்தையில் இண்டக்ஷன் அடுப்புகள் மட்டுமின்றி ரைஸ் குக்கர் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற சாதனங்களுக்கும் பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. தினமும் 40 அடுப்புகள் விற்ற இடங்களில் தற்போது 130-க்கும் மேல் விற்பனையாவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திடீர் தேவையால் மின்சார அடுப்புகளின் இருப்பு வேகமாக தீர்ந்து வருகிறது.