தமிழக சட்டசபை தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என்ற பரபரப்பான தகவல்

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. தற்போதைய திமுக அரசின் பதவிக்காலம் மே 10ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளுடன் கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஏற்கனவே சென்னையில் ஆலோசனை நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளார். அரசியல் கட்சிகளின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்குப் பிறகு, வரும் 15ஆம் தேதி தேர்தல் அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால் தமிழக அரசியல் களம் தற்போது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.