வேலை மாறினாலும் பிஎஃப் வட்டி குறையாது இனி 58 வயது வரை லாபம் நிச்சயம்

தனியார் துறை ஊழியர்கள் வேலையை விட்டாலும் அவர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு தொடர்ந்து வட்டி வழங்கப்படும் என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. பழைய விதிகளின்படி 36 மாதங்கள் பங்களிப்பு இல்லையெனில் கணக்கு முடக்கப்படும் நிலை இருந்தது. ஆனால் தற்போதைய புதிய மாற்றத்தின்படி சந்தாதாரருக்கு 58 வயது ஆகும் வரை பிஎஃப் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி வரவு வைக்கப்படும். 2025-26 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலையிலிருந்து விலகி இரண்டு மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் முழுத் தொகையையும் திரும்பப் பெற முடியும். இருப்பினும் புதிய வேலையில் சேரும்போது பழைய கணக்கை இடமாற்றம் செய்வதே ஓய்வூதிய பலன்களைப் பெற சிறந்த வழியாகும். நீண்ட கால முதலீடாக இருக்கும்போது இதற்கான வட்டிக்கு வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே ஊழியர்கள் தங்கள் ஆதார் மற்றும் கேஒய்சி விவரங்களைச் சரியாகப் புதுப்பித்து கணக்கைச் செயல்பாட்டில் வைத்திருப்பது அவசியமாகும்.