யுனுஸ் அரசு நடத்திய தேர்தலை கண்துடைப்பு என சாடி ஷேக் ஹசீனா கடும் எச்சரிக்கை
February 13, 2026

வங்கதேசத்தில் நடந்த பொதுத்தேர்தல் ஒரு நாடகம் மற்றும் மிகப்பெரிய மோசடி என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக விமர்சித்துள்ளார். அவாமி லீக் கட்சியை ஒதுக்கி வைத்து நடத்தப்பட்ட இந்த சட்டவிரோதத் தேர்தல், மக்களின் ஜனநாயக உரிமைகளையும் அரசியலமைப்பையும் அவமதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். பிப்ரவரி 11 இரவு முதலே வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு, முறைகேடுகள் மூலம் இந்தத் தேர்தல் திட்டமிடப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போதைய அரசை கொலைகார மற்றும் பாசிச ஆட்சி எனக் குறிப்பிட்ட ஹசீனா, இந்தத் தேர்தல் முடிவுகளை உடனடியாக ரத்து செய்யக் கோரினார். மிகக் குறைவான வாக்குப்பதிவு மக்கள் இந்த சதியை நிராகரித்ததைக் காட்டுகிறது என்றார். அரசியல் கைதிகளை விடுவிக்கவும், நடுநிலையான இடைக்கால அரசின் கீழ் மீண்டும் வெளிப்படையான தேர்தலை நடத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.