டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜராக விஜய்க்கு அதிரடி சம்மன்
March 10, 2026

கரூர் பொதுக்கூட்டத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மார்ச் 10-ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இருமுறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கூடுதல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அவகாசம் கேட்கப்பட்டதாலேயே இந்த மூன்றாவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், விஜய்க்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், இந்த விசாரணையின் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் இருக்கலாம் எனச் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இது தேர்தல் களத்தில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.