ஈரான் எடுத்த அதிரடி முடிவால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு
March 10, 2026

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை அந்நாடு மூடியுள்ளது. இதனால் உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது. எதிரி நாடுகளுக்கு ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்யப்படாது என ஈரான் ஆயுதப்படை எச்சரித்துள்ளதால் சர்வதேச அளவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த மோதலால் உலகப் பொருளாதாரத்தில் பேரழிவு ஏற்படும் என சவுதி அராம்கோ எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ள போதிலும், போரைத் தீர்மானிப்பது தாங்களே என ஈரான் உறுதிபடத் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இப்பகுதிக்குத் தங்கள் கடற்படைகளை அனுப்பியுள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.