மாநிலங்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கிறது மூன்று மாநிலங்களுக்கு பாஜக மேலிட பார்வையாளர்கள் நியமனம்

மாநிலங்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கிறது மூன்று மாநிலங்களுக்கு பாஜக மேலிட பார்வையாளர்கள் நியமனம்

நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு பீகார், ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது. பீகார் மாநிலத்திற்கான பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் ஹரியானா மாநிலத்திற்கான பொறுப்பு குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒடிசா மாநிலங்களவை தேர்தலை மகாராஷ்டிர அமைச்சர் சந்திரசேகர் பவல்குலே பார்வையாளராக இருந்து கவனிப்பார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வியூகங்களை வகுக்கவும் கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த முக்கிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *