இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றி தருணத்தை சொதப்பிய ரவி சாஸ்திரி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றி தருணத்தை சொதப்பிய ரவி சாஸ்திரி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

அகமதாபாத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. ஆனால் கடைசி விக்கெட் வீழ்ந்த அந்த பொன்னான தருணத்தில் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி அது ஒன்பதாவது விக்கெட் என தவறாக கூறியது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. வெற்றியின் சிலிர்ப்பை அந்த ஒரு நொடி தவறான அறிவிப்பு குறைத்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தவறை உணர்ந்து பின்னர் இந்தியா சாம்பியன் என அவர் திருத்தி பேசினாலும் அந்த வரலாற்று தருணத்தின் வீச்சு குறைந்துவிட்டது. 2011 உலகக்கோப்பை வர்ணனை போன்ற ஒரு மேஜிக்கை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் வீரர்களின் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க சாஸ்திரியின் இந்த கவனக்குறைவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *