அருண் ஜெட்லி மைதானத்தில் மிச்சமான குளிர்பானங்கள் மீண்டும் விற்கப்படுகிறதா

அருண் ஜெட்லி மைதானத்தில் மிச்சமான குளிர்பானங்கள் மீண்டும் விற்கப்படுகிறதா

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் போது வெளியான ஒரு வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாஸ்களில் மிச்சமிருந்த குளிர்பானங்கள் மீண்டும் பாட்டில்களில் நிரப்பப்படுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இச்சம்பவம் ரசிகர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பலத்த சந்தேகங்களையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA), இந்த வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. வணிக ஒப்பந்தப்படி மிச்சமான பானங்களைச் சேகரித்து அழிக்கும் பணியே அங்கு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் தூய்மை மற்றும் தரமான சேவைகளை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *