60 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தொலைந்த சிஐஏ அணுகுண்டு: இந்தியாவுக்கு பெரும் ஆபத்தா?

1965 ஆம் ஆண்டில், சீனாவின் ஏவுகணை சோதனைகளைக் கண்காணிக்க, சிஐஏ மற்றும் இந்திய மலையேறுபவர்கள் குழு நந்தா தேவி சிகரத்தில் அணுசக்தி மூலம் இயங்கும் உளவு சாதனத்தை நிறுவ திட்டமிட்டது. இந்தச் சாதனத்தில் நாகசாகி குண்டில் பயன்படுத்தப்பட்ட புளூட்டோனியத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமான கதிரியக்க புளூட்டோனியம் இருந்தது. கடும் பனிப்புயலால், மலையேறுபவர்கள் இந்திய அதிகாரி கேப்டன் எம்.எஸ். கோஹ்லியின் உத்தரவின் பேரில் அந்த அணுசாதனத்தை முகாம் நான்கிற்கு அருகில் பனிப்பாறையின் விளிம்பில் மறைத்து வைத்துவிட்டு கீழே இறங்கினர்.
அடுத்த ஆண்டு சாதனத்தை மீட்க சென்றபோது, அது காணாமல் போயிருந்தது. பனிச்சரிவு அல்லது புளூட்டோனியத்தின் வெப்பத்தால் பனி உருகியதால், அது ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1978 இல் இந்த ரகசியம் வெளிவந்தபோது இந்தியாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அன்றைய அதிபர் ஜிம்மி கார்ட்டர் மற்றும் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆகியோர் இந்த விவகாரத்தை மறைக்க ரகசியமாக செயல்பட்டனர். கேப்டன் கோஹ்லி, சிஐஏ-வின் இந்தப் பைத்தியக்காரத்தனமான திட்டத்தில் சிக்கியது தன் வாழ்க்கையின் வருத்தமான அத்தியாயம் என்று குறிப்பிட்டிருந்தார்.