ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக நாடுகளில் உருவாகியுள்ள கடும் எரிசக்தி தட்டுப்பாடு
March 14, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்துள்ளது. வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ஆதாரமான இந்த முக்கிய நீர் வழிப்பாதை மூடப்பட்டதால் உலகளாவிய ரீதியில் கடுமையான எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் தங்களின் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுத் தேவைக்காக இந்த வழித்தடத்தையே பெரிதும் நம்பியுள்ளன. தற்போதைய முடக்கத்தால் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் அமீரகத்திலிருந்து விநியோகம் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.