ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி, எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி, எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

மத்திய கிழக்கு போர் சூழலால் ஈரான் மூடிய ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கொடியுடன் செல்லும் கப்பல்கள் பயணிக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ‘புஷ்பக்’ மற்றும் ‘பரிமல்’ ஆகிய கப்பல்கள் பாதுகாப்பாக இப்பகுதியை கடந்துள்ளன. இதன் மூலம் நாட்டில் நிலவி வந்த எல்பிஜி கேஸ் மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் எல்பிஜி தேவையில் 60 சதவீதமும், கச்சா எண்ணெய் தேவையில் கணிசமான பகுதியும் இந்த கடல் பாதை வழியாகவே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஈரானின் இந்த அதிரடி முடிவால் சவுதி, கத்தார் போன்ற நாடுகளிலிருந்து எரிபொருள் மற்றும் உரம் விநியோகம் தடையின்றி கிடைக்கும். இது பொதுமக்களின் பதற்றத்தைத் தணிப்பதுடன், தொழில் மற்றும் விவசாயத் துறைகளுக்கும் மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *