விவசாயிகளுக்கு ரூ.3000 ஓய்வூதியம்! முழு பலனைப் பெறுவது எப்படி?

பிரதம மந்திரி கிசான் மான் தன் யோஜனா (PM-KMY) திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 18 முதல் 40 வயதுடைய, மாதம் ரூ.15,000-க்கும் குறைவான வருமானம் மற்றும் 2 ஹெக்டேர் வரை சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் சேரலாம். 60 வயது பூர்த்தியான பிறகு வாழ்நாள் முழுவதும் இந்த நிலையான ஓய்வூதியம் கிடைப்பதால், விவசாயிகளுக்கு முதுமையில் நிதிச் சுதந்திரம் கிடைக்கிறது.
இது ஒரு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும்; விவசாயி செலுத்தும் அதே தொகையை மத்திய அரசும் வழங்குகிறது. 18 வயதில் சேர்ந்தால் மாதம் ரூ.55-ம், 40 வயதில் சேர்ந்தால் மாதம் ரூ.200-ம் பங்களிக்க வேண்டும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மூலம் நிர்வகிக்கப்படும் இந்தத் திட்டத்தில், சிஎஸ்சி மையங்கள் (CSC centers) மற்றும் வேளாண்மைத் துறையின் உதவியுடன் எளிதாகப் பதிவு செய்யலாம்.