ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா இந்தியா? ட்ரம்ப் – மோடி ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ள மர்மம்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா இந்தியா? ட்ரம்ப் – மோடி ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ள மர்மம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, அமெரிக்காவிடமிருந்து எரிசக்தி மற்றும் நிலக்கரியைப் பெற இந்தியா 500 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்றும், இதையொட்டி இந்தியப் பொருட்கள் மீதான கூடுதல் வரி ரத்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தில் நேரடியான உறுதிப்பாட்டைத் தவிர்க்கிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், சந்தை நிலவரத்தைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் இந்தியா விளக்கமளித்துள்ளது. இதேவேளை, இந்தியா தனது இறக்குமதியை நிறுத்தும் என நம்புவதற்கு இடமில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த முரண்பட்ட கருத்துக்களால், ரஷ்யாவுடனான இந்தியாவின் நீண்டகால எரிசக்தி உறவு நீடிக்குமா என்பதில் உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *