தலைநகர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பீதியில் உறைந்த டெல்லி
February 9, 2026

டெல்லியில் உள்ள லோரெட்டோ கான்வென்ட் மற்றும் பால பாரதி உள்ளிட்ட பல முன்னணி பள்ளிகளுக்கு இன்று காலை திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காலை 8:30 மணி முதல் 9:00 மணிக்குள் வந்த இந்த மிரட்டல் அழைப்புகளால் கல்வி நிறுவனங்களில் பெரும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தற்போது வரை சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்த மிரட்டல் அழைப்புகளின் பின்னணியில் உள்ள மர்ம நபர்களைக் கண்டறிய விரிவான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.