ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
February 2, 2026

அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, 33.3 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து அசத்தியுள்ளது.
இந்த முக்கியமான வெற்றியில் இந்திய வீரர்களின் சிறப்பான செயல்பாடு மற்றும் துல்லியமான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றி இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. தற்போது உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய இளம் வீரர்கள் அடுத்த கட்டப் போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.