ரஜினிகாந்தை யாராலும் மிரட்ட முடியாது என்று அமைச்சர் ரகுபதி அதிரடி பேச்சு

ரஜினிகாந்தை யாராலும் மிரட்ட முடியாது என்று அமைச்சர் ரகுபதி அதிரடி பேச்சு

புதுக்கோட்டையில் 19.5 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, நடிகர் ரஜினிகாந்த் எதற்கும் அஞ்சாதவர் என்று புகழாரம் சூட்டினார். திமுக அவரை மிரட்டுவதாகக் கூறப்படும் புகார்களை மறுத்த அவர், ரஜினிகாந்த் எப்போதும் தங்களுக்கு நல்ல நண்பர் என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிய அமைச்சர், இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலமாகத் தமிழகம் விளங்குவதாகத் தெரிவித்தார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுக்கும் என்றும், லாக்-அப் மரணங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அவர் விளக்கமளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *