மூன்று கணவர்கள் மற்றும் காதலனால் கைவிடப்பட்ட தாய் எச்ஐவி பாதிப்பால் தனது குழந்தையை கொன்ற கொடூரம்
January 2, 2026

மும்பையின் திலக் நகர் பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மூன்று முறை திருமணமாகி விவாகரத்தான 43 வயது பெண், தனது ஆறு மாத குழந்தையை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார். கர்ப்பமாக இருந்தபோது காதலனாலும் கைவிடப்பட்ட அந்த பெண், கடும் நிதி நெருக்கடியில் வாடி வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கும் அவரது குழந்தைக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இந்த கொடிய நோயினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வறுமை காரணமாக, அந்த பெண் தனது குழந்தையை கொல்ல முடிவு செய்துள்ளார். குழந்தையை கொன்ற பிறகு தனது வேலைக்கார பெண்ணையும் தாக்கிவிட்டு தற்கொலை செய்ய முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். தனது வாழ்வாதாரம் மற்றும் நோயின் தீவிரமே இத்தகைய செயலுக்கு காரணம் என்று அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.