மானாமதுரை ஆகாஷ் டெலிசன் மரணம் எதிரொலி மற்றும் 6 காவலர்கள் அதிரடி பணியிடை நீக்கம்

மானாமதுரை ஆகாஷ் டெலிசன் மரணம் எதிரொலி மற்றும் 6 காவலர்கள் அதிரடி பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் டிஐஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்ஐ குகன் உட்பட 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகாஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது எஸ்சி – எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்கவும், இந்த மரணம் தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *