மத்திய கிழக்கு போர் சூழலில் பொதுமக்களை காக்க பிரதமர் நரேந்திர மோடி அதிரடி உத்தரவு
March 11, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் எரிவாயு உருளைகளின் கறுப்புச் சந்தையைத் தடுக்க 25 நாட்கள் இடைவெளி முன்பதிவு விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று அமைச்சர்களுக்கு பிரதமர் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிப்பது உள்ளிட்ட 6 முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவும், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.