மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்ட பெயர் மாற்றம் நாடாளுமன்றத்தில் கடும் மோதல்

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்ட பெயர் மாற்றம் நாடாளுமன்றத்தில் கடும் மோதல்

மத்திய அரசு 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்றி, புதிய ‘VB-G RAM G’ மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இதை காந்தியின் கனவுத் திட்டம் எனக் கூறினார். ஆனால், திட்டத்தில் இருந்து காந்தியின் பெயரை நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன.

மாநில அரசுகள் 40 சதவீத நிதிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனைக்கும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தினால் வேலைவாய்ப்பு உறுதி சிதையும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இருப்பினும், இந்த புதிய சட்டம் ஊழலைத் தடுத்து கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *