போர்க்களத்தில் இந்தியாவின் அதிரடி வியூகம் இனி ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டியதில்லை

போர்க்களத்தில் இந்தியாவின் அதிரடி வியூகம் இனி ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டியதில்லை

உலகளாவிய அரசியல் சூழல்கள் மற்றும் நவீன போர்க்கால மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் தனது ஆயுத பலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியப் போர்களின் அனுபவங்களைக் கொண்டு நீண்ட காலப் போரை எதிர்கொள்ளும் வகையில் வெடிபொருட்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. தற்போது இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

ரஷ்யா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளைச் சார்ந்திருந்த நிலை மாறி தற்போது இந்தியப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 200 வகையான வெடிபொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதுடன் மேலும் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதுடன் உலக அரங்கில் இந்தியாவின் ராணுவ இறையாண்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *