பழங்களில் ஒளிந்துள்ள பார்மலின் நஞ்சை நீக்க எளிய மற்றும் பாதுகாப்பான வழிகள்
December 28, 2025

குளிர்கால சந்தைகளில் கிடைக்கும் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாலும், அவற்றில் கலக்கப்படும் பார்மலின் போன்ற இரசாயனங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. வியாபாரிகள் பழங்களை நீண்ட காலம் கெடாமல் வைத்திருக்க இந்த நச்சுக்களைப் பயன்படுத்துகின்றனர். இதனைத் தவிர்க்க சில எளிய வீட்டு முறைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பழங்களை வினிகர் கலந்த நீரில் சுமார் 15 நிமிடங்கள் ஊறவைப்பதன் மூலம் 100 சதவீதம் வரை பார்மலினை அகற்ற முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. வினிகர் இல்லையெனில் உப்பு கலந்த நீரையும் பயன்படுத்தலாம். இதேபோல் மீன்களில் உள்ள நச்சுக்களை நீக்க உப்பு நீர் அல்லது அரிசி கழுவிய நீரைப் பயன்படுத்தினால் 70 முதல் 90 சதவீதம் வரை இரசாயனத் தாக்கத்தை குறைக்கலாம்.