நேருவின் பஞ்சசீலக் கொள்கை குறித்த வரலாற்றுத் தவறைச் சுட்டிக்காட்டினார் சிடிஎஸ் அனில் சௌஹான்

1954 ஆம் ஆண்டு நேரு சீனாவுடன் மேற்கொண்ட பஞ்சசீல ஒப்பந்தம் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான் தெரிவித்துள்ளார். டெஹ்ராடூனில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர் திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா அங்கீகரித்ததை சீனா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டார். இந்தியா இதை எல்லை அமைதிக்கான தீர்வாகக் கருதிய வேளையில் சீனா இதை வெறும் வணிக ஒப்பந்தமாக மட்டுமே பார்த்தது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு எல்லைகளை வரையறுப்பதில் இந்தியா காட்டிய மெத்தனமும் திபெத் என்ற பாதுகாப்பு அரண் மறைந்ததும் தற்போதைய எல்லைப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாகும். இந்தியாவின் அமைதிப் போக்கை தவறாகப் புரிந்துகொண்ட சீனா இன்றும் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பதற்றத்தைத் தக்கவைத்துள்ளது. நேருவின் காலத்து அந்த ராஜதந்திரத் தவறு இன்றும் இமயமலைப் பகுதிகளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலாகவே நீடிக்கிறது என்று அவர் விளக்கினார்.