துப்பாக்கிச் சூடு மத்தியில் ‘நிஜ ஹீரோ’ செயல்: சிட்னி தாக்குதலில் துப்பாக்கியை பறித்து துணிந்த நபர் – வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் ஹனுக்கா பண்டிகையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கூட்டத்தில் பீதி நிலவிய நிலையில், ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் துப்பாக்கியைப் பறித்து, அவரை அடக்கியதன் மூலம் ஈடு இணையற்ற வீரத்தைக் காட்டினார்.
அந்த துணிச்சலான நபர், தாக்குதல் நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, பதிலுக்கு அவருக்கே குறிவைத்து கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். மற்றொரு துப்பாக்கிதாரியும் சுட்டுக் கொண்டிருந்தாலும், இந்தச் செயல் கூட்டத்தினருக்கு நம்பிக்கையை அளித்தது. இச்சம்பவத்தை ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் இஸ்ரேலிய தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
Salute to this man who saved 100’s of lives in Bondi Beach, Sydney Australia 🇦🇺! He snatched the gun from terrorist!pic.twitter.com/sZoGN9PbWx
— Star Brief (@StarBrief) December 14, 2025