திமுகவின் சட்ட எரிப்பு போராட்டத்தை பைத்தியக்காரத்தனம் என விமர்சித்தாரா பெரியார்
March 10, 2026

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக அறிவித்த அரசியல் சாசன சட்ட எரிப்பு போராட்டத்தை ஈ.வெ.ரா பெரியார் கடுமையாக விமர்சித்தார். சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்து பதவியேற்றவர்களே அதை எரிப்பது ‘பைத்தியக்காரத்தனம்’ என்று குறிப்பிட்ட அவர், இது வெறும் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வித்தை என்றும் சாடினார். முதலமைச்சர் பக்தவத்சலமும் இந்த போராட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மதுரையில் பேசிய அண்ணா, இந்தி திணிப்புக்கு எதிரான ஆழமான உணர்வை வெளிப்படுத்தவே சட்டத்தின் ஒரு பகுதியை எரிப்பதாக விளக்கினார். நேரு தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என நம்புவதாகவும், போராட்டம் தொடரும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். காமராஜர் மற்றும் அண்ணா ஆகிய இரு துருவங்களின் பிரச்சாரத்தால் அன்றைய தமிழக அரசியல் களம் பெரும் கொந்தளிப்பில் இருந்தது.