சேவா தீர்த்தத்தை திறந்து வைத்து விகசித பாரத உறுதிமொழியை ஏற்றார் பிரதமர் மோடி
February 13, 2026

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சரவை செயலகத்தை உள்ளடக்கிய புதிய சேவா தீர்த்த வளாகத்தை திறந்து வைத்தார். பிரிட்டிஷ் காலனித்துவ அடையாளங்களில் இருந்து விடுபட்டு நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இது ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த நவீன தளம் இந்திய கொள்கை முடிவெடுப்பதில் புதிய வேகத்தை அளிக்கும்.
விஜய ஏகாதசி நன்னாளில் இந்த தொடக்கம் அமைந்திருப்பது வெற்றிக்கான அறிகுறி என்று பிரதமர் பெருமிதம் கொண்டார். அடிமைத்தனத்தின் அடையாளங்களாக விளங்கிய பழைய கட்டிடங்களுக்கு மாற்றாக இந்த சேவா தீர்த்தம் அமையும். வரும் காலத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் சேவை மனப்பான்மைக்கு இதுவே மையப்புள்ளியாக விளங்கும் என்று அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.