சென்னையில் 1,500 காகங்கள் திடீர் உயிரிழப்பு! பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவுமா?
February 6, 2026

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 1,500 காகங்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரிசோதனையில் அவற்றுக்கு H5N1 எனப்படும் தீவிர பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இந்த வைரஸ் உருமாற்றமடைந்து பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, இந்த பாதிப்பால் உயிரிழப்பு விகிதம் 48 சதவீதமாக உள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் நிமோனியா போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது.