செந்தில் பாலாஜிக்கு சிபிஐ போட்ட ஸ்கெட்ச் கரூரில் அடுத்த அதிரடி
March 10, 2026

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. மார்ச் 10 அன்று டெல்லி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அந்த சம்மனை அவரது தரப்பினர் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மின்னஞ்சல் மூலமாகவும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமான செந்தில் பாலாஜிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ பிடி இறுகுவதால், அவர் தற்போது தனது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.