சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு நடுவே கோவையில் அடுப்பில்லாமல் தயாராகும் 2000 உணவுகள்

தமிழகத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்கள் திணறி வரும் நிலையில், கோவையைச் சேர்ந்த ‘படையல்’ சிவா அடுப்பு மற்றும் எண்ணெய் இன்றி 2000-க்கும் மேற்பட்ட பதார்த்தங்களை தயாரித்து அசத்தி வருகிறார். எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் பால் கொண்டு காய்கறிகளை ஊறவைத்து வேகவைக்கும் இந்த இயற்கை முறையில், இட்லி முதல் பீட்சா வரை அனைத்தும் 15 நிமிடங்களில் தயாராகின்றன. கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஆரோக்கியமான உணவு முறையை அவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
6 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ள சிவா, மாட்டுப் பாலுக்குப் பதில் தேங்காய் பால் தயிரைப் பயன்படுத்தி முற்றிலும் இயற்கையான உணவுகளை வழங்குகிறார். தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாகவும், உடல் நலத்திற்கு உகந்ததாகவும் இந்த ‘நோ ஆயில் நோ பாயில்’ முறை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருமண விசேஷங்களிலும் இந்த அடுப்பில்லா சமையல் முறை இப்போது டிரெண்டாகி வருகிறது.