சிபிஐ சம்மன் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதில்
March 11, 2026

கரூரில் மினி டைடல் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சிபிஐ தனக்கு சம்மன் அனுப்பியது ஆச்சரியமாக இருப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என உறுதிபடக் கூறினார். விசாரணை எப்படி அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளைச் சாடிய அவர், மணல் கடத்தல் மற்றும் தேர்தல் பரிசுப் பொருட்கள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். வரும் தேர்தலில் கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னமே மீண்டும் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.