சிட்னி தாக்குதலுக்கு மோடி கண்டனம்; பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ‘ஜீரோ டாலரன்ஸ்’ உறுதி

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாடிய யூதர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்த துயரமான தருணத்தில் இந்தியா ஆஸ்திரேலிய மக்களுக்கு முழு ஆதரவுடன் துணை நிற்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இந்தியா கடுமையாக நிராகரிப்பதாக அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக இந்தியா ‘ஜீரோ டாலரன்ஸ்’ கொள்கையில் உறுதியாக உள்ளது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கிறது என்றும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.