ஒரு நாளில் 4 மணி நேரம் கழிவறை பிரேக்! சிசிடிவி காட்சிகள் காட்டி வேலையை விட்டது நிறுவனம்

ஒரு நாளில் 4 மணி நேரம் கழிவறை பிரேக்! சிசிடிவி காட்சிகள் காட்டி வேலையை விட்டது நிறுவனம்

கிழக்கு சீனாவைச் சேர்ந்த ஒரு பொறியாளர், வேலையின்போது அடிக்கடி மற்றும் நீண்ட நேரம் கழிவறை பிரேக் எடுத்ததால், பணியிலிருந்து நீக்கப்பட்டார். சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கையின்படி, ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ‘லி’ என்ற அந்தப் பொறியாளர், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மொத்தமாக 14 முறை கழிவறைக்குச் சென்றுள்ளார். ஒரு நாள் அதிகபட்சமாக நான்கு மணி நேரம் பிரேக் எடுத்தார். இதனை வேலை நேரத்தில் பணியிடத்தில் இல்லாமையின் மீறல் எனக் கருதி நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்தது.

தனக்கு மூல நோய் (Piles) இருப்பதால் அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தது எனக் கூறி, சட்டவிரோத பணிநீக்கத்திற்கு எதிராக லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 3,20,000 யுவான் இழப்பீடு கோரினார். இருப்பினும், நிறுவனம் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. சாதாரண உடல் தேவைக்கு அதிகமாக கழிவறையில் செலவிட்ட நேரத்தால் நிறுவனத்தின் வேலை பாதிக்கப்பட்டது என நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இரு தரப்பினரிடையே நீதிமன்றம் மத்தியஸ்தம் செய்து, லி-க்கு 30,000 யுவான் கொடுப்பனவு வழங்க நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *