எல்லையில் கடும் பதற்றம்! வங்கதேச கலவரம் பரவாமல் தடுக்க இந்திய எல்லையில் தீவிர பாதுகாப்பு

வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, இந்திய-வங்கதேச எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முர்ஷிதாபாத் மாவட்ட எல்லைகளில் மேற்கு வங்க காவல்துறையினர், பிஎஸ்எஃப் வீரர்களுடன் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜங்கிபூர் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கால்நடையாக இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அண்டை நாட்டு கலவரத்தின் தாக்கம் இந்தியப் பகுதிகளில் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வங்கதேசத்தின் மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறை பாதுகாப்பில் இருந்தும், கும்பலால் அவர் தாக்கிக் கொல்லப்பட்டதை சமூக ஊடகங்களில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.