விஜய்க்கு டெல்லி கொடுத்த கெடு மற்றும் சிபிஐ வளையத்தில் தவெக தலைவரின் அரசியல் எதிர்காலம்

தமிழக வெற்றிப் கழகத் தலைவர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ தனது இறுதிக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. மார்ச் 10-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது, இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தலை முன்னிட்டு பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சுமார் 65 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்தும், விஜய் தயக்கம் காட்டுவதால் ‘கூட்டணி அல்லது அரசியல் ஓய்வு’ என்ற ரீதியில் டெல்லி மேலிடம் நெருக்கடி கொடுப்பதாகத் தெரிகிறது. இந்த சிபிஐ சம்மன் விஜய்யின் தேர்தல் பிரச்சார வேகத்தைக் குறைக்கும் ஒரு அரசியல் அஸ்திரமாகப் பார்க்கப்படுகிறது.