வனவிலங்குகளைக் காப்பாற்ற நெடுஞ்சாலையில் புதிய ஏற்பாடு மத்தியப் பிரதேசத்தில் முதல் முறையாக நிதின் கட்கரி உத்தரவு

இந்தியாவில் வனவிலங்குகள் பாதுகாப்பில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முயற்சியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தொடங்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு முக்கியமான பகுதியில் முதன்முறையாக சிகப்பு நிறத்தில் ‘டேபிள்-டாப்’ குறியீடுகள் (marking) அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வாகனங்களின் வேகத்தைக் குறைத்து, விலங்குகளின் உயிர்களைக் காக்க உதவும்.
சமீபத்தில் ஒரு சிறுத்தை குட்டி விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. சுமார் 5 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட இந்த சிகப்பு மேல்தளக் குறியீடுகள், ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை அளித்து, தானாகவே வேகத்தைக் குறைக்கத் தூண்டும். சுமார் ₹122 கோடி மதிப்பிலான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.