மரணத்திற்கு முன்னால் ஏன் கோதானம் செய்ய வேண்டும் இதன் பின்னணியில் உள்ள கருட புராண ரகசியம்

இந்து மதத்தின் 18 மகாபுராணங்களில் ஒன்றான கருட புராணம், ஒரு மனிதனின் பாவ புண்ணியங்கள் மற்றும் மரணத்திற்குப் பிந்தைய ஆத்மாவின் பயணம் குறித்து விளக்குகிறது. இதன்படி, ஒரு நபர் இறப்பதற்கு முன்னால் பசுவை தானம் செய்வது மிகச்சிறந்த அறமாக கருதப்படுகிறது. இவ்வாறு கோதானம் செய்வது ஒருவரது பாவங்களின் விளைவைக் குறைத்து, நரகத்தில் அனுபவிக்கும் வேதனைகளிலிருந்து ஆத்மாவிற்கு விடுதலை அளிப்பதாக நம்பப்படுகிறது.
யமலோகத்தில் உள்ள வைதரணி நதி மிகவும் கொடூரமானது என்றும், பாவிகள் அதை கடக்க பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால், மரணத்திற்கு முன் கோதானம் செய்தவர்களின் ஆத்மா, அந்த பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணி நதியை எளிதாகக் கடந்துவிடும். இத்தகைய புண்ணியம் செய்தவர்களுக்கு யம தூதர்கள் தொல்லை தருவதில்லை என்றும், அவர்கள் மோட்சம் அல்லது சொர்க்கத்தை அடைவார்கள் என்பதும் ஐதீகம்.