மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு மூலம் மிகப்பெரிய சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு

மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அமல்படுத்தினால் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ. 18,000-லிருந்து ரூ. 51,480-ஆக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.86-ஆக அதிகரிக்கப்படும் பட்சத்தில், நிலை 1 முதல் நிலை 10 வரையிலான அனைத்துப் பிரிவு ஊழியர்களின் வருமானத்திலும் பெரும் மாற்றம் ஏற்படும். குறிப்பாக காவலர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை அனைவரது ஊதியமும் இந்த புதிய பரிந்துரைகளின் அடிப்படையில் கணிசமாக உயரும்.
இது தொடர்பாக மை-கவ் இணையதளத்தில் 18 கேள்விகள் அடங்கிய கருத்துக்கணிப்பை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை மார்ச் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ நடவடிக்கை எட்டாவது ஊதியக்குழு அமைப்பதற்கான முதற்கட்டமாக பார்க்கப்படுவதால், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.