தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல், மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்த அதைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ‘பரிட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கைப்பேசி மற்றும் திரைகளுக்கு அடிமையாவது முன்னேற்றத்தைத் தடுக்கும் என்றும், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தேர்வில் சிறந்து விளங்க முறையான தயாரிப்பு மற்றும் போதிய உறக்கம் அவசியம் என்று மோடி குறிப்பிட்டார். மேலும், தலைமைப் பண்பு என்பது வெறும் தேர்தல் சார்ந்தது மட்டுமல்ல, ஒருவரது கருத்துக்களை மற்றவர்களிடம் தெளிவாகக் கொண்டு சேர்ப்பதே சிறந்த தலைமைத்துவத்தின் அடையாளம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் முக்கியம் என பிரதமர் தனது உரையில் எடுத்துரைத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *