தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் நேருக்கு நேர் சந்திப்பா
February 14, 2026

வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஒரே மேடையில் பங்கேற்றால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரு நாட்டு தலைவர்களும் கைகுலுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு டாக்காவில் அரங்கேற வாய்ப்புள்ளது.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் சார்க் அமைப்பை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் பிஎன்பி தலைமை ஆர்வம் காட்டுகிறது. இந்தியாவின் பிம்ஸ்டெக் முன்னுரிமைக்கும் பிஎன்பியின் சார்க் முக்கியத்துவத்திற்கும் இடையிலான இந்த ராஜதந்திர நகர்வு தற்போது தெற்காசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.