சார்பு ஆய்வாளர் தேர்வு ரத்து மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்

சார்பு ஆய்வாளர் தேர்வு ரத்து மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. தேர்வில் தமிழ் வினாக்கள் குறைவாக இருந்ததாகவும் உளவியல் பகுதியில் கூடுதல் வினாக்கள் கேட்கப்பட்டதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இருப்பினும் பாடத்திட்டத்திற்கு வெளியே கேள்விகள் கேட்கப்படவில்லை எனக்கூறி நீதிபதி பி. புகழேந்தி இந்த மனுவை நிராகரித்தார்.

சுமார் 1.38 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, ஒரு குறிப்பிட்ட பிரிவில் இவ்வளவு வினாக்கள் தான் கேட்க வேண்டும் என்று மனுதாரர் கோர முடியாது எனத் தெளிவுபடுத்தினார். அதே வேளையில் வருங்காலங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் போதிய வினாக்கள் கேட்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *