குளிர்காலத்தில் கை கால்கள் ஜில்லிப்படைவதை சாதாரணமானதாக கருதாதீர்கள் இது ஒரு எச்சரிக்கை மணி
January 2, 2026

குளிர்காலத்தில் கை மற்றும் கால்கள் குளிர்ச்சியடைவதை நீரிழிவு நோயாளிகள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவர் விக்ரம் ஜீத் சிங் கூறுகையில் அதிகப்படியான இரத்த சர்க்கரை அளவு இரத்த நாளங்களை சுருக்கி இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த அறிகுறியை புறக்கணித்தால் அது புண்கள் ஆறாமல் போவதற்கும் கேங்க்ரின் போன்ற கடுமையான நோய்த்தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.
நீண்ட கால உயர் இரத்த சர்க்கரை நரம்புகளை வலுவிழக்கச் செய்து நீரிழிவு நியூரோபதிக்கு காரணமாகிறது. இதனால் வலி அல்லது வெப்ப உணர்வு குறைந்து கை கால்களில் ஒருவித மரத்துப்போன உணர்வு ஏற்படும். இதிலிருந்து தப்பிக்க இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் தினசரி உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமாகும்.