எல்பிஜி தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்த நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
March 11, 2026

நாடு முழுவதும் நிலவும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன. காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு அவையை ஒத்திவைக்கச் செய்தனர்.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவகங்கள் மற்றும் சிறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கே.சி. வேணுகோபால் மற்றும் சவுகத் ராய் குற்றம் சாட்டினர். போதிய கையிருப்பு இருப்பதாக அரசு பொய் கூறி மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.